நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விரைவு ரயிலில் பயணம் செய்த பெண்ணின் பையிலிருந்து வெளியேறிய நண்டுகள்

நியூ யார்க்: 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விரைவு ரயிலில் பெண் யணம்செய்துகொண்டிருந்தார்.  

அப்போது அவர் கையில் வைத்திருந்த பை கிழிந்த நிலையில் அதில் உயிருடன் இருந்த நண்டுகள் வெளியேறின.

இதனால் ரயிலில் திடீரென சலசலப்பு ஏற்பட்டதாக The Independent செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பதறிப்போன அந்தப் பெண் ரயிலின் கதவுகளை நோக்கி ஓடினார். 

அருகிலிருந்த பயணிகள் உடனே உதவிக்கரம் நீட்டினர். சிலர் தரையில் ஓடத்தொடங்கிய நண்டுகளைப் பிடிக்க வேறு பைகளைக் கொடுத்தனர். சிலர் நண்டுகளைப் பிடிப்பதற்கும் உதவி செய்தனர்.

சுற்றியிருந்த பலருக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிறருக்குத் தன்னால் அசௌகரியம் எற்பட்டபோதும் சகப் பயணிகள் தனக்கு உதவியதற்காகப் பெண் நன்றி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset