செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தேர்தலை அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூர், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டது.
சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட அனுமதிப்பது இது முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி.
மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, தேர்தல் முடிவைக் காண மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
