
செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தேர்தலை அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூர், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டது.
சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட அனுமதிப்பது இது முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி.
மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, தேர்தல் முடிவைக் காண மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm