நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையை தொடர்ந்து ஜாலான் கெபூன், ஸ்ரீ மூடா, கோத்தா கமுனிங் ஆகிய இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன

ஷாஆலம்:

கனமழையை தொடர்ந்து ஜாலான் கெபூன், ஸ்ரீ மூடா, கோத்தா கமுனிங் ஆகிய இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

ஷாஆலம் சுற்று வட்டாரத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் தொடர்ந்து  கனமழை பெய்தது.

இதனால் சம்பந்தப்பட்ட இடங்களை சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

சில இடங்களில்  வெள்ள நீர் 0.6 மீட்டர் வரை ஆழத்தை எட்டியது.

சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குனரான அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை கூறினார்.

இதுவரை நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளத்தால் யாரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.

அதிகாரிகள் வெள்ளப் பகுதியைச் சுற்றி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset