நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரவாங் பைபாஸ் நெடுஞ்சாலை அருகே குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது

ரவாங்:

ரவாங்கில் உள்ள ரவாங் பைபாஸ் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று பிறந்த குழந்தை என நம்பப்படும் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

உலு சிலாங்கூர் போலிஸ்படையின் துணைத் தலைவர் முஹம்மத் அஸ்ரி முஹம்மத் யூனுஸ் இதனை கூறினார்.

மதியம் 1 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள பழைய பொருட்களைத் தேடிக் கொண்டிருந்த 53 வயதுடைய உள்ளூர் ஆடவரிடம் இருந்து  போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பிறந்த குழந்தையை யாருக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கலாம்.

அதன் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்களுக்கு எங்களுக்கு 03-60641223 என்ற எண்ணில் அழைத்து தகவல் கொடுக்கலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset