செய்திகள் வணிகம்
தொழிற்சாலையை மூடிவிட்டு 100 ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்த சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்
கோலாலம்பூர்:
இளம் தொழிலதிபரும் சமூக ஊடகப் பிரபலமுமான கைருல் அமிங் (Khairul Aming) தமது ஊழியர்களுக்காகச் செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
கிளந்தான் மாநிலத்தில் உணவு உற்பத்தித்தொழில் செய்துவரும் அவர் தமது தொழிற்சாலையை 5 நாள்களுக்கு மூடிவிட்டு அதில் வேலை செய்யும் 100 ஊழியர்களைப் பினாங்கு மாநிலத்திற்கு விடுமுறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Instagram-இல் அவர் பதிவேற்றிய அந்தக் காணொளியை இரண்டு மணி நேரத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர்.
ஊழியர்கள் தங்குவதற்கு கைருல் 5 நட்சத்திரத் தங்கும் விடுதி அறைகளுக்கும் ஏற்பாடு செய்தார். செலவுக்காக அவர்களுக்குப் பணமும் கொடுத்துள்ளார்.
தமது வர்த்தகத்துக்காக அயராமல் உழைக்கும் ஊழியர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கவேண்டும் என்பதே அந்த விடுமுறையின் நோக்கம் என்று 31 வயதாகும் கைருல் தமது Instagram பதிவில் குறிப்பிட்டார்.
பலரும் கைருலின் குணத்தைப் பாரட்டினர்.
கைருல் கடந்த 2021வ்ஆம் ஆண்டு "சம்பால்" வகை உணவுப் பொருளை அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் அவர் அறிமுகப்படுத்திய 2ஆவது "சம்பால்" உணவு மூன்றே நிமிடங்களில் 1.2 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனையானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:15 pm
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு மீண்டும் அனுமதி
September 13, 2024, 10:10 pm
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தியா கேட் உணவகம் 10ஆவது கிளை திறப்பு
September 12, 2024, 12:36 pm
Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு
September 9, 2024, 1:02 pm
99 ஸ்பீட் மார்ட் தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டம்
September 8, 2024, 4:50 pm
சிங்கப்பூர் - மெல்பர்ன் விமானச் சேவையை நிறுத்தவிருக்கும் எமிரேட்ஸ்
September 1, 2024, 1:51 pm
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
August 28, 2024, 6:39 pm
பங்சாரில் பிரம்மாண்டமாக திறப்பு விழா கண்டது MOSIN SIGNATURE உணவகம்
August 27, 2024, 5:30 pm