செய்திகள் உலகம்
வியட்நாமை கதிகலங்க வைத்த யாகி புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு
ஹனோய்:
யாகி வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது.
மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும்
இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.
புயல் வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில், வியட்நாமில் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 69 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
