
செய்திகள் உலகம்
வியட்நாமை கதிகலங்க வைத்த யாகி புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு
ஹனோய்:
யாகி வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது.
மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும்
இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.
புயல் வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில், வியட்நாமில் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 69 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு
March 9, 2025, 11:50 am
குவைத் விமான நிலையம் திடீரென மூடப்பட்டது
March 8, 2025, 7:15 pm
ஆஸ்திரேலியாவில் கடும் புயல்: 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இல்லை
March 8, 2025, 3:58 pm
பறக்கும் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளம் பெண்: சக பயணிகள் அதிர்ச்சி
March 7, 2025, 3:38 pm