செய்திகள் உலகம்
கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
டோமாசினா, மடகாஸ்கர்:
பலத்த காற்றுடன் வீசிய கெசானி சூறாவளி மடகாஸ்கரின் இரண்டாவது பெரிய நகரமான டோமாசினாவை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை கரையை கடந்த இந்த சூறாவளி 250 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி நகரை சீரழித்துள்ளது. தேசிய அபாய, பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, நால்வர் காணாமல் போயுள்ளதுடன், குறைந்தது 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டோமாசினா நகரின் 75 சதவீதம் பகுதிகள் அழிந்துள்ளதாக புதிய தலைவர் கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா தெரிவித்தார். இந்த நிலைமை நாட்டின் தனித்திறனை மீறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அட்சினானனா பகுதியும் இதனால் கடுமையாக சேதமடைந்துள்ளது. வீடுகளின் 90 சதவீத கூரைகள் பறந்துவிட்டதாகவும், சாலைகளில் மரங்கள், இரும்புத் தகடுகள் விழுந்ததால் முற்றிலும் மறிக்கப்பட்டுள்ளதாகவும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 9:06 pm
சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்
February 12, 2026, 3:25 pm
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மலேசியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
February 12, 2026, 2:41 pm
வைரல் வீடியோவிற்காக நஞ்சு நண்டைச் சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் பெண் சமூக ஊடகர் பலி
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
February 10, 2026, 3:38 pm
பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்
February 10, 2026, 11:23 am
நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 12:35 pm
