நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்

கார்த்தூம்: 

வட சூடானில் நைல் நதியில் ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ரிவர் நைல் மாநில அரசு வெளியிட்ட தகவலின்படி, தேடுதல், மீட்பு நடவடிக்கைகளின் போது இதுவரை 21 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை மாலை வட கார்த்தூம் பகுதியில் நைல் நதியை கடக்க 30 பயணிகளுடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சம்பவத்தின் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset