செய்திகள் விளையாட்டு
ஒலிம்பிக் வீராங்கனையைத் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்
நைரோபி:
அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த உகாண்டா நெடுந்தொலைவு ஓட்ட வீராங்கனை ரெபெக்கா செப்டிகேய் மிகக் கடுமையான தீக்காயங்கள் காரணமாக செப்டம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
செப்டிகேய் மீது அவரது காதலர் டிக்சன் என்டிமா மரான்காச் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று நிகழ்ந்தது
33 வயது செப்டிகேய் செப்டம்பர் 5ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி கென்யாவில் உள்ள மருத்துவமனையில் மாண்டார்.
அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
தாக்குதல் நடத்திய மரான்காச்சுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமது தாயார் தாக்கப்பட்டதை செப்டிகேயின் இரண்டு மகள்களும் பார்த்தனர்.
செப்டிகேய்க்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 11:11 am
ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்
September 16, 2024, 11:06 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
September 16, 2024, 10:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2024, 11:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 14, 2024, 8:49 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
September 14, 2024, 8:46 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
September 13, 2024, 8:44 am
மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி
September 13, 2024, 8:38 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியை மறுகட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது: ரொனால்டோ
September 12, 2024, 9:15 am
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியது எதிர்கால வெற்றிக்கான நம்பிக்கையைத் தருகிறது: கேரத் சவுத்கேட்
September 12, 2024, 8:48 am