நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

900 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார் The Real GOAT கிறிஸ்டியானோ ரொனால்டோ

லிஸ்பன்: 

கால்பந்து விளையாட்டைத் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் கிரிஸ்டியானோ ரொனால்டோவைத் தெரிந்திருக்கும்.

சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை என்ற அளவிற்கு அத்தனை சாதனைகளையும் செய்திருக்கின்றார். 

கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப்  படைத்துள்ளார். 

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்த்துகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்தான் இவர் இந்த சாதனை படைத்தார்.

தாம் நீண்ட காலமாக அடைய விரும்பிய ஒரு மைல்கல் இது என்று 900 கோல்கள் அடித்தது குறித்து வெற்றிக்குப் பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.

மேலும், இந்தக் கோல் எண்ணிக்கையைத் தாம் அடைவேன் என்று உறுதி தமக்குள் இருந்ததையும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset