செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம்; விமரிசையாக நடைபெறும்: டான்ஶ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
தலைநகர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
இவ்வாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
நாளை செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மாலை 7 மணிக்கு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று வைபவம் நடைபெறும்.
இரவு 7.30 மணிக்கு ஶ்ரீ கணேசர் பெருமான் தங்க ரதத்தில் தலைநகரை சுற்றி வலம் வருவார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
சனிக்கிழமை என்பதால் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீ கணேசர் பெருமானின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 10:50 am
கெமாமானில் மரம் விழுந்து கம்போடியா நாட்டு பெண்மணி மரணம்
September 19, 2024, 10:49 am
சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்
September 19, 2024, 10:25 am
குளோபல் இக்வான் சின்னம் கொண்ட இரு வாகனங்களுடன் ஐவர்: தாய்லாந்து செல்லும் வழியில் கைது
September 19, 2024, 10:20 am
மலேசியத் திரைப்படத்துறைக்குப் புதிய அடையாளம்: THE FORGE MALAYSIA பயிற்சி முகாம்
September 19, 2024, 10:16 am
வசதி குறைந்த மாணவர்களின் பதிவு கட்டணத்தைப் பல்கலைக்கழகங்கள் ஒத்திவைக்க வேண்டும்: ஜம்ரி அப்துல் காடீர்
September 19, 2024, 10:15 am
பிகேஆர் கட்சியின் சைஃபுடின் நசுத்தியோன் ஓரங்கட்டப்படவில்லை: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
September 19, 2024, 10:11 am
மக்கோத்தா இடைத்தேர்தலில் மூடா கட்சி எங்களுக்கு ஆதரவு வழங்கும்: அஸ்மின் அலி நம்பிக்கை
September 18, 2024, 10:27 pm
ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசு முடிவு: ஜாஹித்
September 18, 2024, 10:07 pm
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2024, 9:09 pm