நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல்முறையாக 24 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை 

பாரிஸ்:

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல்முறையாக 24 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. 

தோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை மட்டுமே வென்றது. 

இந்நிலையில், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் போலந்தின் லூகாஸ் சிஸ்ஜெக்கை எதிர்கொண்டார்.

இதில் ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். 

இதன்மூலம் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்விந்தர் சிங் தன் வசமாக்கினார். 

அதன்பின் நடைபெற்ற க்ளப் த்ரோ (F51) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது.

தரம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கம் என 24 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 13-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset