நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த  24 குழுக்கள் பங்கேற்பு

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

விக்டோரியா இடைநிலைப் பள்ளி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் விலாயா மாநிலத்தைச் சேர்ந்த 15 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்றன.

இதில் பெண்கள் பிரிவில் 8 குழுக்களும் பங்கேற்றன.

மீபாவின் ஆலோசகரும் சுக்கிம் தலைவருமான டத்தோ டி. மோகன் இந்த கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியை காண அதிகமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்தது மிகவும் பாராட்டுக்குரியது.

குறிப்பாக வெற்றியாளர் பட்டத்தை வெல்ல அனைத்து குழுக்களும் கடுமையாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset