நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நாளை மலேசிய எப்.ஏ. கிண்ண காற்பந்து இறுதியாட்டம்; ஜொகூர்- சிலாங்கூர் அணிகள் பலப்பரீட்சை 

ஷா ஆலாம்: 

2024/2025ஆம் ஆண்டுக்கான மலேசிய எப்.ஏ. கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் நாளை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது 

ஜொகூர் அணி சிலாங்கூர் அணியை இறுதியாட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இறுதியாட்டத்திற்கு மட்டும் சுமார் 85 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நிலைமையைச் சமாளிக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் கூறினார். 

நாளைய ஆட்டம் விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்குக் காற்பந்து விருந்தாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மலேசிய எப்.ஏ கிண்ணத்தை சிலாங்கூர் அணி 5 முறையும் ஜொகூர் அணி 2 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset