நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வாய்ப்புகளை வீணடித்ததால் வீரர்களைச் சாடிய நிர்வாகி

லண்டன்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக்கின் முதல் ஆட்டத்திலேயே டோட்டன்ஹாம் குழுவினர் சொதப்பியது அதன் நிர்வாகி ஆஞ்ச் போஸ்டகாக்லோவை எரிச்சலடையச் செய்துள்ளது.

லெய்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

முற்பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் ஸ்பர்ஸ் குழுவால் வெற்றிபெற முடியாதது தமக்கு வியப்பளிப்பதாகக் கூறினார் போஸ்டகாக்லோ.

ஏமாற்றம் தரும் இரவு. முற்பாதியில் நாங்கள் அருமையாக ஆடி, ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். 

ஆனாலும், கோல்களை அடிக்கத் தவறிவிட்டோம். 

லெய்செஸ்டர் கோலடித்ததும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அக்குழுவினரை மேலும் முனைப்புடன் விளையாடும்படி ஊக்குவித்தது. 

நாங்கள் எங்களது கட்டுக்கோப்பை இழந்துவிட்டோம் என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset