
செய்திகள் வணிகம்
சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பியதற்காக நாசி கண்டார் உணவகத்திற்கு 2 லட்சம் ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பியதற்காக தஃக்வா நாசி கண்டார் உணவகத்திற்கு 2 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரோவின் துணை நிறுவனமான மீசாட் பிராட்காஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட உணவக நிறுவனம் 221,773.20 ரிங்கிட்டை செலுத்த ஒப்புக் கொண்டது.
தஃக்வா சில உணவகக் கிளைகளில் சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ இணைப்புகளை வழங்கியதன் மூலம் சந்தா விதிமுறைகளை மீறியதற்காகத் தொகையைச் செலுத்த ஒப்புதல் தீர்ப்பின் மூலம் செய்யப்பட்ட தீர்வில் ஒப்புக் கொண்டது.
உணவகத்தில் இரண்டு வளாகங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சந்தாக்கள் உள்ளன.
ஆனால் ஸ்மார்ட் கார்டுகள், ஆஸ்ட்ரோ டிகோடர்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி மற்ற எட்டு உணவகங்களில் ஆஸ்ட்ரோ இணைப்புகளை பெற்று ஒளிபரப்பியது.
ஆஸ்ட்ரோ விற்பனை, சந்தைப்படுத்தல் தலைவர் தாய் காம் லியோங் இதனை உறுதிப்படுத்தினார்.
இழப்பீட்டுத் தொகையைத் தவிர, ஆஸ்ட்ரோவின் பதிப்புரிமை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தனது ஆஸ்ட்ரோ சந்தா பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் தக்வா ஒப்புக் கொண்டது.
இதன் மூலம் ஆஸ்ட்ரோ டிஜிட்டல் திருட்டுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm