செய்திகள் உலகம்
குரங்கம்மைத் தொற்று உலகப் பொதுச் சுகாதார நெருக்கடி: WHO அறிவிப்பு
ஜெனிவா:
உலகச் சுகாதார நிறுவனம் ( World Health Organization (WHO) குரங்கம்மைத் தொற்றை (mpox) உலகப் பொதுச் சுகாதார நெருக்கடியாக அறிவித்திருக்கிறது.
அப்படி அறிவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ பெரிய அளவில் mpox நோய்ப் பரவலைச் சந்திக்கிறது. அங்கு பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.
அந்த அம்மை நோய் பக்கத்து நாடுகளுக்கும் பரவி வருவதால் உலகச் சுகாதார நிறுவனம் அஞ்சுகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதார நெருக்கடி அறிவிக்கப்பட்டால் நோய் குறித்த ஆய்வு தீவிரம் அடையும். பணம் திரட்டுவதும், நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்.
உயிர்களைக் காப்பாற்றவும் நோய்ப்பரவலைத் தடுக்கவும் அனைத்துலக அளவில் ஒன்றுசேர்ந்து செயல்படுவது அவசியம் என்றார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus).
நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மத்தியில் குரங்கம்மை நோய் பரவக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
September 17, 2024, 12:58 pm
சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
September 17, 2024, 12:51 pm
வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
September 17, 2024, 12:21 pm
கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன
September 17, 2024, 11:18 am
சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது
September 17, 2024, 10:54 am
70 ஆண்டுகளில் காணாத வகையில் ஷாங்ஹாயை உலுக்கும் பெபின்கா புயல்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm