நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூருக்கும்  சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து

சிங்கப்பூர்:

சிங்கப்பூருக்கும்  சீனாவின் ஷாங்ஹாய் (Shanghai) நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியுள்ளது.

அவற்றுள் நேற்றும் (15 செப்டம்பர்), இன்றும் மேற்கொள்ளப்படவிருந்த பயணங்கள் அடங்கும்.

ஷாங்ஹாய் பேபின்கா (Bebinca) சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது. 

நகரம் அதன் 2 முக்கிய விமான நிலையங்களில் அனைத்துச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூருக்கும்  ஷாங்ஹாய்க்கும் இடையே சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், China Eastern Airlines, Spring Airlines போன்ற நிறுவனங்கள் பயணங்களை ரத்துசெய்தன.

ஷாங்ஹாய் நகரின் நிலவரம் ஏற்றவாறு கூடுதல் விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நகரில் சில ரயில்வே சேவைகளும் படகுச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

சில சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

ஆதாரம்: CNA 

தொடர்புடைய செய்திகள்

+ - reset