நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை: ஸ்டார்பக்ஸ் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி லஷ்மன் நரசிம்மன்

வாஷிங்டன்:

தாம் மாலை மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்று ஸ்டார்பக்ஸ் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி லஷ்மன் நரசிம்மன் தெரிவித்துள்ளார். 

காப்பி ஆர்வலர்களிடையே ஸ்டார்பக்ஸ் மிகவும் பிரபலமானது. 

இந்தியாவிலும், இந்த இந்த நிறுவனத்தின் ரசிகர்களின் பெரும் பட்டாளமே உள்ளது.

அதில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் உள்ளனர். தற்போது, ​​ஸ்டார்பக்ஸ் அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் குறித்து செய்திகளில் உள்ளது.

இந்நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை செயல்முறை அதிகாரி லஷ்மன் நரசிம்மன் பதவி விலகியுள்ளார். லஷ்மணனுக்குப் பதிலாக புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் நிகோலை ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது.

இந்த அறிவிப்பால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இத்தனை பதிவுகளுக்கு மத்தியில் நரசிம்மனின் ஒரு பேட்டியும் வைரலாகி வருகின்றது. வீடியோவில், அவர் தனது வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்று கூறியுள்ளார்.

மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்றும், ஸ்டார்பக்ஸிலுள்ள அனைவருக்கும் மாலை 6 மணிக்குப் பிறகு வேளை நேரம் நீட்டிக்கப்பட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset