நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதால் உறவில் பாதிப்பில்லை: வங்கதேசம்

டாக்கா:

இந்தியாவில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்திருப்பதால் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என  வங்கதேச இடைக்கால அரசு தலைமை ஆலோசகர்  முஹம்மது தெளஹித் ஹூசைன்  
தெரிவித்தார்.  

இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவில் வங்கதேசம் இருக்க விரும்புகிறது.

இந்தியா, சீனா உள்பட எந்தவொரு நாட்டுடனும் எப்போதும் நல்லுறவை மேம்படுத்தவே வங்கதேசம் விரும்புகிறது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வருவது குறித்த முடிவுகளை சட்ட அமைச்சகம் எடுக்கும்.

இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் எங்களிடம் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset