நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 20 எம்.பி.க்கள் மீது லஞ்ச, ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை நாடாளுமன்ற ஆணைக்குழு எச்சரிக்கை

கொழும்பு:

விரைவில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கையின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்தர சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை பின்பற்றாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset