நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படையுங்கள்: போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு

டாக்கா:

சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. 

இந்தப் போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், போராட்டக்காரர்கள் தங்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். 

அப்படி செய்யாவிட்டால் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் சகவத் உசேன் கூறினார். 

மாணவர் போராட்டத்தின் போது சாதாரண உடையில் இருந்த வாலிபர் துப்பாக்கியைக் காட்டிய சம்பவம் நடந்தது. 

வங்க தேச துணை ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது அந்த வாலிபரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset