செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 30ஆவது கல்வி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்
பத்துமலை:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
கடந்த 42 ஆண்டுகளாக இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி வருகிறது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்.
இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக கல்வி யாத்திரை விளங்கி வருகிறது.
அவ்வகையில் 30ஆவது கல்வி யாத்திரை பத்துமலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மழை என்ற சவாலைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இக்கல்வி யாத்திரையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஸ்ரீ முருன் கல்வி நிலையத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குருமான டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்புரையாற்றி கல்வி யாத்திரையை தொடக்கி வைத்தார்.
ஓமத்திற்கு பின் அனைத்து மாணவர்களும் புனித நீரை ஏந்தி பத்துமலை மேல்குகைக்கு சென்று அபிஷேகம் செய்தனர். அதன் பின் மாணவர்களுக்கு தன்முனைப்பு உரை வழங்கப்பட்டது.
இதனிடையே இந்திய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முக்கிய இலக்காகும்.
இதன் ஓர் அங்கமாக இந்த கல்வி யாத்திரை நடைபெற்றது என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
கடவுளை ஒரு நாள் வழிபாட்டால் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ எடுக்க முடியாது என்று எங்களுக்கு தெரியும்.
ஆனால் தொடர்ந்து படிக்க வேண்டும் என மாணவர்களை தூண்டுவது தான் இக்கல்வி யாத்திரையின் நோக்கமாகும்.
அதே வேளையில் கல்வி யாத்திரையை தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு வரை வழிகாட்டப்படும்.
இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் அடுத்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 3:19 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் சந்திப்பார்: குணராஜ்
December 27, 2025, 11:25 am
1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி
December 27, 2025, 10:09 am
பழிவாங்குவதற்காக அல்ல, எனது கொள்கையளவில் தொடர்வேன்: நஜிப்
December 27, 2025, 10:05 am
1 எம்டிபி வழக்கில் நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை: 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம்
December 26, 2025, 1:59 pm
2023 முதல் 620,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை MYFutureJobs பூர்த்தி செய்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
December 26, 2025, 1:42 pm
சவூதி மன்னரிடமிருந்து நன்கொடை பெற்றதை நஜிப் உறுதிப்படுத்தவில்லை: நீதிபதி
December 26, 2025, 1:25 pm
1 எம்டிபி வழக்கு; ஜோ லோ நஜிப்பின் பினாமி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றம்
December 26, 2025, 12:00 pm
