செய்திகள் மலேசியா
தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல்: பிரதமர்
புத்ராஜெயா:
தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் தியோ பெங் ஹாக் மரணமடைந்தார்.
அவரின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் வலியுறுத்தி வந்தனர்.
இதன் அடிப்படையில் பிரதமரையும் நாங்கள் சந்திக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார், மரணமடைந்த தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை சந்தித்தார்.
இச் சந்திப்புக்கு பின் பிரதமர் கூறியதாவது,
15 ஆண்டுகளுக்கு முன்பு, தியோ பெங் ஹாக்கின் மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்காக போலிஸ் படையிடமும் வலியுறுத்தப்படும்.
மேலும் விசாரணை வெளிப்படையாகவும், குறுக்கீடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்றும்,
குறிப்பாக செப்டம்பர் 5, 2014 அன்று வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்ததாக அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
