செய்திகள் உலகம்
ஹமாஸ் தலைவரை படுகொலை செய்தவர்களை பழிதீர்ப்போம்: ஈரான் தலைவர் சூளுரை
டெஹ்ரான்:
ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இதற்கு எதிராக பதிலடி கொடுப்போம் என அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சூளுரைத்தார்.
இந்த நிலையில், ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இஸ்மாயில் ஹனியே எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார்.
டெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது.
இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஹனியேயை கொலை செய்தது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில், இஸ்ரேல் தான் இந்த படுகொலையை செய்ததாக ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 4:55 pm
சூடான் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்: 13 குழந்தைகள் உட்பட 64 பேர் பலி
March 22, 2026, 1:40 pm
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ராயல் கிங்ஸ் குழுமம்: பிரம்மாண்ட நோன்புத் திறப்பு நிகழ்வு
March 22, 2026, 12:18 pm
சிதைந்த நிலையில் காசா: கண்ணீரில் நனைந்த ஈகைத் திருநாள்
March 22, 2026, 11:44 am
தொழில்நுட்ப கோளாறு: கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
March 22, 2026, 10:26 am
தெற்கு இஸ்ரேலில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
March 21, 2026, 12:23 pm
