
செய்திகள் இந்தியா
இந்தியா- அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றுள்ளன: அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்:
இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று அதிபர் ஜோபைடன் அந்நாட்டு பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது கூறினார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அமெரிக்க - இந்திய உறவு மேலும் உறுதியாகவும் நெருக்கமாகவும் திகழும் என்று அதிபர் பைடன் கூறினார்.
அதிபர் பைடனின் தலைமையில் இருநாட்டு நல்லுறவு முக்கிய பங்காற்றும் என்றும் இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் உறுதியடைவதற்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக, துணை அதிபர் கமலா ஹாரிஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி சுட்டுரையில் பதிவிட்டார்.
ஆனால், கமலா ஹாரிஸ் மோடியுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பிறகு சந்தித்த தலைவர்கள் குறித்த விவரங்களை அவர் பதிவிட்டிருந்தார்.
கமலா ஹாரிஸுடனான பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவது தொடர்பான விவகாரத்தை துணை அதிபர் ஹாரிஸ் தாமாகவே எழுப்பியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி, வாரணாசியின் "குலாபி மீனாகாரி' வேலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட சதுரங்கக் காய்களை பரிசாக அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm