செய்திகள் இந்தியா
தில்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைதி சுட்டுக் கொலை: 2 பேரை போலீஸார் சுட்டனர்
புது டெல்லி:
கிரிமினல் வழக்குகள் தொடர்புடைய பிரபல ரெளடி ஜிதேந்தர் கோகியை, எதிர்க்கோஷ்டியினர் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் சுட்டுக் கொன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருவரும் வழக்குரைஞர் உடையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியபோது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் பெண் வழக்குரைஞருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சண்டை விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதனால் தலைநகர் தில்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் போலீஸார் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும்
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் அவ்வப்போது நடைபெற்றுவது வழக்கமானதுதான் என்றும் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
