செய்திகள் மலேசியா
இணையப் பகடிவதைக்கு இலக்காகி ஈஷா மரணம்: சட்ட ஆலோசனையை நாடும் குடும்பம்
கோலாலம்பூர்:
ஈஷா என்று பரவலாக அறியப்படும் சமூக ஊடகப் பிரபலமான ராஜேஸ்வரி அப்பாவுவின் தற்கொலை விசாரணை குறித்து அவரது குடும்பம் சட்ட ஆலோசனை பெறக் கோரிக்கை விடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து மலேசியாவின் இணைய மிரட்டல் சட்டகளில் மாற்றங்கள் கொண்டுவருவதை அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.
30 வயது ராஜேஸ்வரி இம்மாதம் (ஜூலை 2024) 5ஆம் தேதி அவரது வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
அதற்கு முந்திய நாள் அவர் கோலாலம்பூரில் காவல்துறையிடம் புகாரளித்திருந்தார்.
பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் குறித்து அவர் புகார் கொடுத்திருந்தார்.
டிக் டாக் தளத்தில் தம்மை மிரட்டி கேலி செய்யும் இருவரின் பெயர்களை ராஜேஸ்வரி புகாரில் குறிப்பிட்டார்.
டிக்டாக் நேரடிக் காணொலியில் ஒருவர் தம்மைக் கடுஞ்சொற்களைக் கொண்டு மிரட்டியதாகவும் அவர் சொன்னார்.
போலிஸ் துறையிடம் புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராஜேஸ்வரியின் குடும்பம் கேட்பதாக வழக்கறிஞர் கூறினார். விசாரணை முறையிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜேஸ்வரியின் திறன்பேசிகளைக் காவல்துறை துல்லிதமாக விசாரிக்கவில்லை என்றும் வழக்கறிஞர் ஹர்பால் சிங் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:37 pm
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
March 24, 2026, 2:36 pm
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 1:42 pm
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
