செய்திகள் மலேசியா
நெங்கிரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும்
கோலாலம்பூர்:
அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பாகத் தேசிய முன்னணி போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவ செயலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே இவ்விரு கூட்டணிகளும் ஒன்றாக இணைந்து தேசிய முன்னணி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு வழங்குமென கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டதாக செயலகத்தின் தலைவர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி அறிக்கையின் வாயிலான தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியைச் சார்ந்த நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதால் நெங்கிரி சட்டமன்ற தொகுதி காலியானதாக கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக, குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸிசி அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியவர்களில் ஒருவராவார்.
இருப்பினும் அவர் பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கான ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
பின்னர், நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வழி விடுவதாகவும் அஸிசி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:44 pm
மலாக்கா துப்பாக்கி சூடு சம்பவம்; இன ஒடுக்குமுறையில் சகிப்புத்தன்மை இல்லை: பிரதமர்
December 13, 2025, 8:17 pm
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்: குலசேகரன்
December 13, 2025, 8:16 pm
மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா; 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: பசுபதி
December 13, 2025, 3:37 pm
இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும்: டாக்டர் சிவமுருகன்
December 13, 2025, 11:36 am
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
