செய்திகள் மலேசியா
பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த 6 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இனி சுயேட்சையாக செயல்படுவார்கள்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்த பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி சுயேட்சையாகத் தங்கள் தொகுதிகளில் சேவையாற்ற போவதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட 6 பேர் சார்பாகப் பேசிய வாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான், தாங்கள் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
"நாங்கள் சார்ந்துள்ள தொகுதி மக்களுக்கு உதவ அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை விரும்புகின்றோம். அந்த அடிப்பையில் மட்டுமே அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றோம்" என அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த செய்தியாளர் சந்திப்பில், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸிசி அபு நியாம், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸுல்கப்பெரி ஹனாபி, ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாஹரி கெசிக், கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கண்டர் சுல்கர்னைன் அப்துல் காலிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் அபு ஹுசேன் உடல்நலக் குறைவு காரணமாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துலின் முடிவு நியாயமானது என சுஹைலி கூறினார்.
கட்சியை காட்டிலும் தொகுதி மக்களின் நலன் தான் முக்கியம். மக்களுக்கான செயல்திட்டத்தை முன்னெடுக்க பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதையும் சுஹாலி செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:52 pm
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm