
செய்திகள் விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: தேசியக் கொடியை ஏந்தி செல்லும் பி.வி.சிந்து
புதுடெல்லி:
33-ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 9:59 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
June 1, 2025, 9:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 31, 2025, 8:57 am
சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்
May 31, 2025, 8:54 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 30, 2025, 10:39 am
ரொனால்டோ தொடர்ந்து சவூதி லீக்கில் விளையாடுவார்: அல் நசர் கிளப் நம்பிக்கை
May 30, 2025, 10:38 am
யாரோ ஒருவர் என் தாயை அவதூறாக பேசினார்: அமாட் டியாலோ
May 29, 2025, 1:09 pm
ஐரோப்பா கான்பரன்ஸ் லீக்: செல்சி சாம்பியன்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm