நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க நஜீப்பிற்கு அனுமதி

கோலாலம்பூர்:
தண்டனை குறைப்பு விவகாரத்தில்வழக்கறிஞர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜீப்பிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

நஜீப்பிற்கு எதிரான சிறைத்தண்டனை, அபராதத்தை குறைப்பதற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் மன்றம் நீதித்துறை மறுஆய்வு நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவிற்கு பதிலளிக்க நஜிப் ரசாக்கை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இன்று பிற்பகல் நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் முஹம்மது ஷாபி அப்துல்லாவின் வாய்வழி கோரிக்கையை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற ஏற்றுக்கொண்டது.

அனுமதி விண்ணப்ப கட்டத்தில் இருக்கும்போதே வழக்கறிஞர் மன்றத்தின் சட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் நிதியமைச்சரை அனுமதிக்க வேண்டும் என ஷாபி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset