![image](https://imgs.nambikkai.com.my/WhatsApp-Image-2024-07-02-at-4-57-57-PM.jpeg)
செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் - மலேசிய போலிசார் நடத்திய சோதனையில் 43 பேர் கைது
சிங்கப்பூர்:
சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகளும் மலேசிய போலிஸ் அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதில் 9 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எஞ்சியவர்கள் மீது விசாரணை தொடர்வதாக போலிஸ் தரப்பில் குறிப்பிட்டது.
கடந்த இரு தினங்களும் கூட்டுக் காவல்துறைச் சோதனைகள் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
அப்போது 37 ஆண்களும் 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.
மலேசிய போலிஸ் அதிகாரிகள் 4 சிங்கப்பூர் ஆடவர்களை மலேசியாவில் கைது செய்தனர்.
ரொக்கம், நகை, சொகுசுக் கடிகாரங்கள், 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆகியவை விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மின்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2024, 4:45 pm
போதைப்பொருள் கடத்தியதற்காக தொழிலாளருக்கு 30 ஆண்டுகள் சிறை, 12 கசையடி
July 4, 2024, 1:17 pm
துன் டைய்மின் வழக்கு: நீதிமன்ற இடமாற்ற விண்ணப்பம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்
July 4, 2024, 11:15 am
KTM நிலையங்கள் மோசமாக உள்ளன: பொதுப் போக்குவரத்து வழக்கறிஞர் தகவல்
July 4, 2024, 10:58 am
Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகின்றது
July 4, 2024, 10:43 am