நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப் பொருள் வழக்கில் தம்மை தற்காத்துக் கொள்ள தொழிலதிபருக்கு உத்தரவு: மனைவி தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்

ஈப்போ:

10 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் வழக்கில் தம்மை தற்காத்துக் கொள்ள தொழிலதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் அவரின் மனைவி தூக்குத் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 10 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 45 வயதான மொஹிந்தர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதே வேளையில் அவரின் மனைவியான 54 வயதான ஜி. பிரிமிலா மீதும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

குறிப்பாக இந்த வழக்கில் தம்மைத் தற்காத்துக் கொள்ள தற்காப்பு வாதம் புரிய சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கூட்டு குற்றச்சாட்டில் தன்னைத் தற்காத்துக் கொள்ள இரண்டாவது குற்றவாளியான பிரிமிளாவை அழைப்பது பாதுகாப்பானது அல்ல என்று நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset