![image](https://imgs.nambikkai.com.my/ranil-33158.jpg)
செய்திகள் உலகம்
இந்தியாவின் நிதியுதவியால் பொருளாதார நெருக்கடி சமாளிப்பு: இலங்கை அதிபர் ரணில்
கொழும்பு:
இந்தியா வழங்கிய ரூ.29,000 கோடி நிதியுதவியால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவர்மேலும் கூறுகையில், இந்திய பிரதமர் மோடி பதவியேற்ற விழாவுக்கு சென்றபோது அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது இலங்கை-இந்தியா இடையேயான மின்சார இணைப்புத் திட்டம், சம்பூர் சூரியசக்தி திட்டம், திரிகோணமலை மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பேசினேன்.
நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு குழாய் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் திட்டத்துக்கான இறுதி அறிக்கை உள்பட இருநாடுகள் இடையேயான பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்.
பொருளாதார நெருக்கடியில் இரண்டு ஆண்டுகள் இலங்கை சிக்கித் தவித்தது. அப்போது ரூ.29,000 கோடி வரையிலான கடனுதவியை இந்தியா வழங்கியதால் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2024, 11:14 pm
நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
June 29, 2024, 4:07 pm
சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
June 29, 2024, 1:44 pm
21 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
June 28, 2024, 7:43 pm
பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு
June 27, 2024, 10:58 pm
போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா
June 26, 2024, 6:38 pm
துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை
June 26, 2024, 1:13 pm
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
June 25, 2024, 10:52 pm
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி
June 25, 2024, 6:56 pm
அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை
June 25, 2024, 2:42 pm