
செய்திகள் மலேசியா
சீனப் பிரதமர் லீ கியாங் இன்று முதல் மலேசியா பயணமாகின்றார்
கோலாலம்பூர்:
இன்று முதல் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாக வரும் சீன பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் அன்வார் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச பிரச்சனைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று விஸ்மா புத்ராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுனர்.
இலக்கவியல்பொருளாதாரம், பசுமை மேம்பாடு, சுற்றுலா, வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் மேம்பாடு, உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சீனாவிற்கு வேளாண் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை குறித்து இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.
லீ கியாங்கின் மலேசியா வருகையானது, மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாகும்.
இரு தலைவர்களும் 50-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இரவு விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கூடுதலாக, லி கியாங் யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் இப்ராகிமையும் பார்வையிடுவார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm