செய்திகள் மலேசியா
காசாவுக்கு உதவிப் பொருட்களை இணைந்து வழங்க மலேசியா, துருக்கி ஒப்புக் கொண்டுள்ளன: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பாலஸ்தீனத்தின் காசாவில் மனிதாபிமான உதவிகளை இணைந்து வழங்க மலேசியாவும் துருக்கியும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan-னுடன் தொலைபேசி உரையாடல் மூலம் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று என்று பிரதமர் அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிடுள்ளார்.
Recep Tayyip Erdogan சமீபத்தில் இத்தாலியில் நடந்த G7 உச்சி மாநாட்டில் காசாவில் நடந்த படுகொலைகளுக்குக் கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் மலேசியாவிற்கு வருகை தருமாறு எர்டோகனுக்கு பிரதமர் அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.
1964-ம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான அரசத் தந்திர உறவின் 60-ஆவது ஆண்டு நிறைவு பெறவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
