
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள்: அனைத்துக் கடற்கரைகளும் இன்று மூடப்பட்டன
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே எண்ணெய் கசிந்ததால் செந்தோசாவின் அனைத்துக் கடற்கரைகளும் இன்று (15 ஜூன்) மூடப்பட்டன.
பொதுமக்கள் கரையில் இருக்க அனுமதி உண்டு. ஆனால் நீச்சல், கடல் நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கோவ் குடியிருப்பு வட்டாரத்தில் வசிப்போரிடம் அது பற்றி தெரிவிக்கப்பட்டது.
பாலாவான், சிலோசொ, தஞ்சொங், செந்தோசா கோவ் ஆகிய கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள் காணப்பட்டன.
நேற்று (14 ஜூன்) பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே இருக்கும் கடல் நீரில் எண்ணெய் கசிந்தது.
கனரகக் கப்பல் ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்த கப்பலுடன் மோதியது. அதனால் நகராமல் இருந்த கப்பலில் இருந்த எண்ணெய் நீரில் கொட்டியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 11:15 am
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am