நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Coca-Cola பானங்களில் இனி உண்மையான கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Coca-Cola அந்நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் டிரம்ப் சுட்டிக் காட்டினார். 

இந்த மாற்றத்திற்கு இணங்கிய Coca-Cola நிறுவன அதிகாரிகளுக்கு  டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

தற்போது Coca-Cola நிறுவனம் high-fructose corn syrup (HFCS) எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பானங்களில் பயன்படுத்துகிறது.

இதற்கு அமெரிக்கச் சுகாதார அமைச்சர் ராபர்ட் கென்னடி பல நாள்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

1970-ஆம் ஆண்டுகளில் சோள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத் தள்ளுபடிகளால் HFCS-இன் பயன்பாடு பிரபலமானது.

HFCS-யைவிட கரும்புச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்று கூறிவிட முடியாது.

உடல் எடை, இதய ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது HFCS, கரும்புச் சர்க்கரை ஆகிய இரண்டின் பாதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஆய்வு கூறுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset