
செய்திகள் இந்தியா
உலகளாவியக் காலநிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தகவல்
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற 'திரிஷ்ணா' திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
இஃது உயர்- தெளிவு இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு - சிவப்பு 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்று அழைக்கப்படுகின்றது.
உலகம் முழுவதுமுள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை இந்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்தியா, ஐரோப்பா கடுமையான வெப்பத்தால் தாக்கப்பட்டு இருக்கும்போது, பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளைக் கண்காணிக்கும்.
அத்துடன், இது நிலத்திலிருந்து நீர் ஆவியாதலை அளவிடுகின்றது.
இந்தப் பணி மூலம் நீர் இருப்பு மற்றும் உருகும் பனிப்பாறைகள் உள்ளிட்ட இயக்கவியல் நடவடிக்கைகள், உயிர்க்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலத்தில் பயன்படுத்தப்படும் நீரை அளவிடுவது எப்படி என்பதை அறிய முடியும்.
செயற்கைக்கோள் வெப்ப முரண்பாடுகள் மற்றும் கூர்முனை, நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள், பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
இந்தச் செயல்பாட்டில், செயற்கைக்கோள், நீராவி, உலகம் முழுவதுமுள்ள வளிமண்டலத்திலுள்ள மேகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்யும்.
இது தற்போது 2025-ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் இயங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm