
செய்திகள் இந்தியா
டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 13 வயது சிறுவன்: காவல்துறை கண்டுபிடித்தது
புதுடெல்லி
டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மிரட்டல் விடுத்தவரைத் தேடிய காவல்துறையினருக்குக் கிடைத்திருப்பதோ 13 வயது சிறுவன்.
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், தன்னை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கவே, தான் இவ்வாறு செய்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி தில்லி சர்வதேச விமான நிலைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், விரைவில் புறப்படவிருக்கும் ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சோதனையில் மின்னஞ்சல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்த புரளி காரணமாக, 301 பயணிகளும் 16 பணியாளர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானம் தொலைவான இடத்தில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. பிறகுதான் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm
சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்
March 9, 2025, 9:55 pm
இஸ்ரேல் சுற்றுலா பயணி உட்பட 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் பயங்கரம்
March 9, 2025, 2:30 pm
கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு
March 7, 2025, 12:14 pm
மருந்தின் அளவு அதிகமாகியதால் சிக்கல்… என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்
March 7, 2025, 11:48 am
மேலும் 1 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து: அமெரிக்காவில் இருந்து தானாகவே வெளியேற நிர்ப்பந்தம்
March 4, 2025, 1:26 pm