![image](https://imgs.nambikkai.com.my/Delhi-airport-ef637.jpg)
செய்திகள் இந்தியா
டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 13 வயது சிறுவன்: காவல்துறை கண்டுபிடித்தது
புதுடெல்லி
டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மிரட்டல் விடுத்தவரைத் தேடிய காவல்துறையினருக்குக் கிடைத்திருப்பதோ 13 வயது சிறுவன்.
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், தன்னை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கவே, தான் இவ்வாறு செய்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி தில்லி சர்வதேச விமான நிலைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், விரைவில் புறப்படவிருக்கும் ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சோதனையில் மின்னஞ்சல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்த புரளி காரணமாக, 301 பயணிகளும் 16 பணியாளர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானம் தொலைவான இடத்தில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. பிறகுதான் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm