செய்திகள் உலகம்
மலாவியின் துணை அதிபர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை
மலாவி:
மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா உட்பட பத்து பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலாவியின் தலைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பின்னர் ஹெலிகாப்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலாவி அதிபர் உடனடி தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மலாவியின் அண்டை நாடுகளுக்கும், அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, இஸ்ரேலிய அரசுகளுக்கும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகிறது.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் முன்னிலை வேட்பாளராகக் கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022இல் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
