செய்திகள் வணிகம்
மாலத்தீவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு உள்நாட்டு கரன்சி: இந்தியா - சீனா ஒப்புதல்
மாலே:
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக அவரவர் உள்நாட்டு கரன்சி மூலம் பணம் பெற்றுக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்தாக மாலத்தீவு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது சயீது தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து 78 கோடி டாலர் மதிப்பிலும் சீனாவிடம் இருந்து 72 கோடி டாலர் மதிப்பிலும் இறக்குமதி வர்த்தகத்தில் ஆண்டுதோறும் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது.
அரசு ஊடகத்துக்கு அமைச்சர் சயீது கூறுகையில், இந்தியா மற்றும் சீனாவுடனான நமது வருடாந்திர இறக்குமதி வர்த்தக மதிப்பு 140 முதல் 150 கோடி டாலர் வரை இருக்கும்.
இந்தப் பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டு கரன்சி மதிப்புகளில் பணம் செலுத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருநாடுகளிடமும் பேசி வருகிறோம்.
இதன்மூலம், நம்மால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும். மேலும், டாலருக்கான தேவை வருங்காலத்தில் படிபடியாக குறையும்' என்றார்.
இதன்மூலம், மாலத்தீவு அரசால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 11:08 am
உயரும் எண்ணெய் விலை: டிரம்பின் 60 நாள் ஜோன்ஸ் சட்டம் விலக்கு
March 18, 2026, 6:03 pm
சிங்கப்பூர் டாலர் முன்னிலையில் உயர்ந்த ரிங்கிட்
March 18, 2026, 12:39 pm
பொருளாதார வளர்ச்சியில் தபுங் ஹாஜி நிறுவனம்; 3.50 சதவீத லாபப்பகிர்வுடன் சாதனை
March 13, 2026, 12:42 pm
பொருளாதார அசாதாரணத்திலும் மலேசிய நிதி நிலை வலுப்பெற்றது
March 13, 2026, 10:45 am
எண்ணெய் விலை உயர்வு எச்சரிக்கை: உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
March 12, 2026, 12:21 pm
எண்ணெய் விலை நிலைத்ததைத் தொடர்ந்து ரிங்கிட் தொடர்ந்து உயர்வு
March 12, 2026, 11:21 am
இராணுவ நிதியத்தின் வலுவான செயல்திறன்: 5.35% லாபப் பங்கு வழங்கல்
March 11, 2026, 11:57 am
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
March 10, 2026, 3:46 pm
