![image](https://imgs.nambikkai.com.my/india-and-china.jpeg)
செய்திகள் வணிகம்
மாலத்தீவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு உள்நாட்டு கரன்சி: இந்தியா - சீனா ஒப்புதல்
மாலே:
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக அவரவர் உள்நாட்டு கரன்சி மூலம் பணம் பெற்றுக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்தாக மாலத்தீவு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது சயீது தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து 78 கோடி டாலர் மதிப்பிலும் சீனாவிடம் இருந்து 72 கோடி டாலர் மதிப்பிலும் இறக்குமதி வர்த்தகத்தில் ஆண்டுதோறும் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது.
அரசு ஊடகத்துக்கு அமைச்சர் சயீது கூறுகையில், இந்தியா மற்றும் சீனாவுடனான நமது வருடாந்திர இறக்குமதி வர்த்தக மதிப்பு 140 முதல் 150 கோடி டாலர் வரை இருக்கும்.
இந்தப் பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டு கரன்சி மதிப்புகளில் பணம் செலுத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருநாடுகளிடமும் பேசி வருகிறோம்.
இதன்மூலம், நம்மால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும். மேலும், டாலருக்கான தேவை வருங்காலத்தில் படிபடியாக குறையும்' என்றார்.
இதன்மூலம், மாலத்தீவு அரசால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm