செய்திகள் மலேசியா
யாருக்கு வாக்களித்தால் நல்லது என்பதை கோல குபு பாரு மக்கள் சிந்திக்க வேண்டும்: டத்தோ லோகபாலா
கோல குபு பாரு:
யாருக்கு வாக்களித்தால் நல்லது என்பதை கோல குபு பாரு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.
சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், உலு சிலாங்கூர் மைபிபிபி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டம் கோலகுபு பாரு ராசாவில் நடைபெற்றது.
ராசா வட்டாரத்தை சேர்ந்த 500 வாக்காளர்கள் திரண்டு வந்து முழு ஆதரவு வழங்கினர்.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
வாக்களிக்க வேண்டாம் என்று கூறுபவர்களை புறக்கணித்து விட்டு மே 11ஆம் தேதி வாக்களிக்க திரண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
யாருக்கு வாக்களித்தால் இங்குள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உணர்ந்து வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவும் இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் மைபிபிபி கட்சிக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm