நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்கூட்டியே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிப்பு தேசியக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்: கைரூல் அஸ்ஹாரி

உலுசிலாங்கூர்:

முன்கூட்டியே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது தேசியக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்  என்று தேசியக் கூட்டணி வேட்பாளர் கைரூல் அஸ்ஹாரி சவுத் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்குப் பதிவு நேற்று நடந்தது.

இதில் வாக்களிக்க தகுதி பெற்ற 863 பேரில் 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது தேசியக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

12 நாட்கள் பிரச்சாரத்தின் வாயிலாக தேசியக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்ததைக் காட்டியது.

இதனால் இந்த சனிக்கிழமை வாக்களிக்கும் நாள் வரை இந்த வேகத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கைரூல் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset