செய்திகள் மலேசியா
முன்கூட்டியே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிப்பு தேசியக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்: கைரூல் அஸ்ஹாரி
உலுசிலாங்கூர்:
முன்கூட்டியே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது தேசியக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று தேசியக் கூட்டணி வேட்பாளர் கைரூல் அஸ்ஹாரி சவுத் கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்குப் பதிவு நேற்று நடந்தது.
இதில் வாக்களிக்க தகுதி பெற்ற 863 பேரில் 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது தேசியக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
12 நாட்கள் பிரச்சாரத்தின் வாயிலாக தேசியக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்ததைக் காட்டியது.
இதனால் இந்த சனிக்கிழமை வாக்களிக்கும் நாள் வரை இந்த வேகத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கைரூல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm