நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ இன்னும் ஜசெகவை கொஞ்சி முத்தமிட விரும்பினால் தனித்துச் செயல்பட மசீச அஞ்சாது: வீ கா சியோங்  காட்டம்

கோலாலம்பூர்:

அம்னோ இன்னும் ஜசெகவை கொஞ்சிக் கொண்டு முத்தமிட விரும்பினால் கொஞ்சிக்கொண்டு இருங்கள். எங்களுக்கு கவலை இல்லை. தனித்துச் செயல்பட மசீச ஒருபோதும் அஞ்சாது என்று அக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி வரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணிக் கட்சிககை பற்றி தனியாக முடிவெடுக்க வேண்டாம். இதற்கான எச்சரிக்கையை மசீச இங்கு விடுக்கிறது.

அம்னோ தலைவரால் எடுக்கப்பட்ட பல முடிவுகள் ஒருதலைப்பட்சமானவை.

குறிப்பாக வரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகும் தேசிய முன்னணி - நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு தொடர வேண்டும் என டத்தோஸ்ரீ அஹமத் ஜாஹித் விரும்புகிறார்.

தேசிய முன்னணியில் மசீச, மஇகா ஆகிய கட்சிகள் உள்ளன.

எனவே எந்த முடிவும் கூட்டாக எடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜாஹித்திற்கு நினைவுபடுத்துகிறேன்.

அடுத்த தேர்தலுக்கு பின்பும் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைப்பைத் தொடர்வோம் என்று அம்னோ தலைவர் கூறியபோது நான் திகைத்துப் போனேன்.

ஏனென்றால் நாங்கள் அதை தேசிய முன்னணி கூட்டத்தில் ஒருபோதும் விவாதிக்கவில்லை.

ஜசெகவின் வாயை தொடர்ந்து முத்தமிட அம்னோ பிடிவாதமாக இருந்தால், 16ஆவது பொதுத் தேர்தலில் தனித்துச் செல்ல மசீச  தயங்காது.

கைரியின் கெலுவார் செகஜாப் நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீ வீ கா சியோங் இவ்வாறு காட்டமாக கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset