செய்திகள் மலேசியா
மலேசியா - சீனா இரு நாடுகளின் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் வளர்ச்சி
கோலாலம்பூர்:
மலேசியாவும் சீனாவும் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் நினைவுகூரும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் ஷங்கரிலா தங்குவிடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 50 ஆண்டுகளில் மலேசியா-சீனா இருதரப்பு கூட்டாண்மைகள் அரசியல், இராஜதந்திர உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, கல்வி, கலை, கலாச்சாரம், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி சீராகவும் வலுவாகவும் வளர்ந்துள்ளன என்று கோலாலம்பூர் பொருளாதார மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் கூறினார்.
மலேசியாவின் மேம்பாட்டுக்கும் ஆசியான் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது.
சீனா-ஆசியான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (CAFTA) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் வர்த்தகம், முதலீடுகளுடன் இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் இணைந்து வணிக, பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தில் மேலும் உச்சம் தொட வாய்ப்புள்ளது என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசுஃப் கூறினார்.
பசுமை வளர்ச்சி இருதரப்பு ஒத்துழைப்பின் எதிர்கால இயக்கிகளாக இரு தரப்புக்கும் வணிக, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்று மலாக்கா ஆளுநர் முஹம்மத் அலி ருஸ்தம் குறிப்பிட்டார்.
50 ஆண்டுகால அரசு தந்திர உறவுகளை நினைவுகூரும் வகையிலும், ஆழமான பொருளாதார ஒத்துழைப்பிற்காகவும், கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை சாதித்ததை மதிப்பிடுவதற்கும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைப் பற்றி சிந்திக்கவும் இது வழிகோலும் என்று மலேசியாவுக்கான சீன தூதர் அவ்யங் யூஜிங் (Ouyang Yujing).கூறினார்.
இருதரப்பு கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் முக்கிய இயக்கிகள் குறித்தும் இந்த மன்றம் விவாதிக்கும் என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் வளத் துறை துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லாஹ் முஹம்மத் நசீர் (Akmal Nasrullah Mohd Nasir) கூறினார். .
ஆசியாவின் எதிர்காலம், நமது இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழமாக்குவது எப்படி என்பது குறித்தும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், இந்த மன்றம் அரசு, வணிகம், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களை ஒன்றிணைக்கும் என்று இந்த கருத்தரங்கில் உரையாடப்பட்டது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm