நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பைஃசாலின் உடல்நிலை சீராகவுள்ளது

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமிலம் வீசப்பட்டதில் காயமடைந்த சிலாங்கூர் எஃப்சி கால்பந்து வீரர் ஃபைசால் ஹலீமின் உடல்நிலை இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சீராக உள்ளது. 

இரண்டாவது அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் நீடித்தது என்று சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஷஹரில் மொக்தார் தெரிவித்தார். 

ஃபைசாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதை தாம் நேரில் சென்று கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, ஃபைசால் மீது தலைநகரில் உள்ள ஒரு பேரங்காடியில் அடையாளம் தெரியாத நபரால் அமிலம் வீசப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த செயலின் விளைவாக, ஃபைசலின் முகம், கழுத்து மற்றும் கைகள் என உடலின் பல பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டது.

நேற்றைய தினம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset