செய்திகள் மலேசியா
ஃபைசால் ஹலிம் மீது அமிலம் வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய முஹம்மத் இம்ரான் சுரேஷைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
பெட்டாலிங் ஜெயா:
ஃபைசால் ஹலிம் மீது அமிலம் வீசப்பட்ட வழக்கில் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் முஹம்மத் சுரேஷ் இம்ரான் என்பவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அவரிடம் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதைக் கண்டறிய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவை விசாரணைக்கு உதவ முடியும் என்றும் தேசியக் காவல்துறையின் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாகத் தங்கள் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ உடனடியாக முன்வரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மே 11-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதே வேலையில், வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் வகையில் தவறான யூகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm