நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னனி கோல குபு பாரு தொகுதியைத் தற்காத்துக் கொள்ள ஜசெக-விற்கு துணை நிற்கும்: ஜாஹிட் ஹமிடி 

ஹுலு சிலாங்கூர்: 

தேசிய முன்னனி கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜசெக வேட்பாளரான பாங் சோக் தாவ்வின் வெற்றிக்குத் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

டிஏபி ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சி என்பதால் தேசிய முன்னனியின் ஆதரவை எப்போதும் அக்கட்சி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நடந்து முடிந்த தியோமான், பெலாங்காய் மற்றும் கெமாமான் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது தேசிய முன்னனிக்கு ஜசெக உறுதுணையாகச் செயல்பட்டது. 

தற்போது, அவர்கள் செய்த உதவிகளைத் திருப்பிச் செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி வேட்பாளர் வெற்றி பெற்று அத்தொகுதியைத் தற்காப்பார் என்று ஜாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset